11/27/14

வக்கீல்கள் அக்கறை காட்ட வேண்டும் சமூக பிரச்னைகள் குறித்து நீதிபதி சந்துரு பேச்சு

வக்கீல்கள் அக்கறை காட்ட வேண்டும் சமூக பிரச்னைகள் குறித்து நீதிபதி சந்துரு பேச்சு

காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீமன்ற நீதிபதி சந்துரு பேசியது:

நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் மக்களை சுற்றி வளைத்துள்ளது. இவை ஐந்தும் கலந்ததுதான் உலகம் என திருமூலர் கூறியுள்ளார். ஆனால், இந்த ஐந்தையும் பாழ்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்பாடுகள் தற்போது அதிகரித்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் ஐம்பூதங்களை பாதுகாக்காமல் அழிக்கும் செயலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாலத்தீவு கடலில் உள்ளது. இந்தத்தீவு நிலத்தில், கூடுதல் மண் கொண்டு நிரப்பினால், கடல் தண்ணீர் தீவில் புகுந்துவிடாமல் தடுக்கலாம் என யாரோ சொன்னதை தவறாக புரிந்துகொண்டு, தமிழகத்திலிருந்து ஏராளமான மணலை மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர்.

போபாலில் நடந்த விஷ வாயு தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிழந்தனர். உறுப்புகளை இழந்தனர். ஆனால், இவர் களுக்கு இன்னும் முழுமை யான நிவாரணம் சென்று சேரவில்லை. நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை தேக்கி, சுற்றுசூழலை பாதிக்க செய்கி றோம். அதேபோல், விளைநிலங்களை வீணடித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் பகல் கொள்ளை குறித்து மக்களிடையே சரியான புரிதல் இல்லாமல் போய்விட்டது.

சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து, வழக்கறிஞர்கள் அக்கறை செலுத்தவேண்டும். நம்மை தேடிவரும் வழக்குகளோடு, மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுத்தும் வழக்குகளை நாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து தீர்வு காண பாடுபடவேண்டும். இவ்வாறு சந்துரு பேசினார். 

11/26/14

இது .....தான்டா ..... திருச்சி போலீஸ்

இது .....தான்டா ..... திருச்சி போலீஸ்

திருச்சியில் பிரபல ஸ்வீட் கடை பி.ஜி. நாயுடு வாசலில் போலீசார் காவல் காத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலும் கிளைகள் கொண்ட ஸ்வீட் கடை அது.
திருச்சி மாநக

ரில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பாலக்கரை செல்லும் பகுதியில் மெயின்ரோட்டில் இதன் கிளை ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் இக்கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சென்று ரூ.1500க்கு ஸ்வீட் வாங்கியிருக்கிறார். அதிகாரி நேரிடையாக செல்லவில்லை.
அவர் ஜீப்பில் அமர்ந்திருக்க டிரைவர் மட்டும் சென்று வாங்கியிருக்கிறார். வாங்கிய ஸ்வீட்டிற்கு பணம் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக மேனேஜர் கேட்டதற்கு நாங்கள் முதலாளியிடம் பேசிக்கொள்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது. மேலும் மேனேஜர் முழு பணத்தையும் கழித்துக்கொள்ள முடியாது.
கொஞ்சமாவது பணம் கொடுங்கள் என கேட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த டிரைவர் ஸ்வீட் பார்சலை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் கடைக்கு அருகில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய போலீஸ் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுபோல், வாடிக்கையாளர்கள் உள்பட வாகனத்தில் யார் வந்தாலும் அங்கே நிற்கவிடாமல் விரட்டியது.
இதனால் அவர்கள் வேறு கடையை தேடிச் சென்றனர். இவ்வாறு மாலை 6.30க்கு ஆரம்பித்து இரவு 8.30 மணி வரை விரட்டினர்.
போலீஸ் கெடுபிடியால் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்த முடியாததால் அந்த ஸ்வீட் கடையின் அன்றைய வியாபாரம் முற்றிலும் பாதித்தது.
ரூ.1500க்காக 5,000 ரூபாய் வியாபாரத்தை இழந்து விட்டோமே என ஸ்வீட் கடையினர் புலம்பினர்.

11/8/14

350 டன் சமச்சீர் கல்வி புத்தகங்கள் எடைக்கு போட்ட விவகாரம் மணப்பாறை வியாபாரிக்கு வலை

தமிழக அரசு பாடபுத்தகங்களை 350 டன் சமச்சீர் கல்வி புத்தகங்கள் எடைக்கு போட்ட விவகாரம்
மணப்பாறை வியாபாரிக்கு வலை

சிஇஓ அலுவலக பதிவறை எழுத்தர் கைது

கோவையில் 350 டன் பாட புத்தகங்களை எடைக்கு போட்ட விவகாரத்தில் சி.இ. ஓ. அலுவலக பதிவறை எழுத்தரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

மேலும் புத்தகங்களை 28 லாரிகளில் அனுப்பியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் அரசுப்பள்ளி மற்றும் புலியகுளம் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைத்திருந்த 13 லட்சத்து 69 ஆயிரத்து 74 சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் (350 டன்) 22.9.2013ல் மாயமானது.

கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், புத்தகங்களை பழைய பேப்பர் மொத்த வியாபாரி மூலம் சிவகாசி பட்டாசு ஆலைக்கு விற்றது தெரியவந்தது. 350 டன் பாட புத்தகங்களை கிலோ ரூ.2.50 வீதம் விற்று லாபம் பார்த்துள்ளனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, தற்போதைய சிஇஓ ஞானகவுரி கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அதில் முன்னாள் சிஇஓ ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சரவணகுமார், பள்ளி கல்வி துணை ஆய்வாளர்கள் அருள்ஜோதி, பிரின்ஸ் சாலமோன், புலியகுளம் அந்தோணியார் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துசேவியர், பதிவறை எழுத்தர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக தனி அதிகாரி கார்த்திகேயன் ஆகிய 7 பேர் மீது போலீசார், கூட்டுச்சதி, கையாடல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜேந்திரன், சரவணகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சரவணகுமார் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிஇஓ அலுவலக பதிவறை எழுத்தர் சேது ராமலிங்கம் (54) நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் அவரை, மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து நேற்றிரவு கைது செய்தார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;
350 டன் எடை கொண்ட புத்தகங்களை கோவில்பட்டியில் உள்ள பழைய புத்தக வியாபாரிக்கு ஒருவருக்கு 21 லாரிகளிலும், திருச்சி மணப்பாறையை சேர்ந்த பழைய புத்தக வியாபாரி ஒருவருக்கு 7 லாரியிலும் அனுப்பி வைத்தோம்.

கிலோ ரூ.4 வீதம் 350 டன் புத்தகங்களை இருவ ரும் சேர்ந்து விற்றோம். இதன் மூலம் ரூ.12.5 லட்சம் கிடைத்தது. கிடைத்த பண த்தில் நான் கார் வாங்கி னேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள வடக்கூர் ஆகும். 16 வருடத்துக்கு முன் கோவை வந்தேன்.

பல்லடத்தில் அரசு பள்ளியில் காவலாளியாக பணியாற்றினேன். பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது கோவை சிஇஓ அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வருகிறேன்.

கோவை கலெ க்டர் அலுவலகம், பார தியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பழைய பேப்பர் விற்கும் வியாபாரி மூலம் புத்தகங்களை அனுப்பி வைத்தோம் என்று சேதுராமலிங்கம் போலீசில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சேதுராமலிங்கம், சரவணகுமார் ஆகிய இருவரையும் போ லீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வரும் திங்கட்கிழமை மது தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் இருவரது சொத்துகளையும் முடக்க போலீசார் முடக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும் இதில் யார் யாருக்கு பங்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

புத்தகங்களை வாங்கிய வியாபாரிகளை பிடிக்க தனிப்படை போலீ சார் கோவில்பட்டி, மணப்பாறைக்கு சென்றுள்ளனர். கைதான சேதுராமலிங்கம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத் திய சிறையில் அடைத்தனர்.

11/7/14

நீதிபதியாகிறார் ஜெயலலிதா.


 நீதிபதியாகிறார் ஜெயலலிதா. 

கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அதிமுகவில் மனுக்கள் குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செல்வராஜ், அப்போதைய ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பழகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்பி குமார், அமைச்சர் கோகுல இந்திரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

கட்சியினர் தங்கள் குறைகள், புகார்களை மனுவாக அளித்தால், மனுக்கள் குழுவினர் விசாரித்து ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 22ம் தேதி மனுக்கள் குழுவினரை ஜெயலலிதா சந்தித்ததை அடுத்து, தொண்டர்களிடம் மனுக்கள் பெறும் பணி துவங்கியது.

கட்சி தலைமை அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாவட்டத்திலிருந்து முதல் நாளே 84 மனுக்கள் குவிந்தன. மொத்தம் 154 மனுக்கள் வந்தன.

இதற்கிடையே புகாரின் அடிப்படையில் ஜெ பேரவை செயலாளர் பதவி மற்றும் மனுக்கள் குழுவிலிருந்து அன்பழகன் நீக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் கட்சி நடவடிக்கை குறித்து அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்கிறார்.



நேரடியாக கட்சி அலுவலகத்துக்கு சென்றால் ஜாமீனுக்கு சிக்கலாகும் என்பதால் போயஸ் கார்டனிலேயே கட்சி நடவடிக்கை குறித்து விசாரிப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மனுக்கள் குழு மந்த கதியில் இருப்பதை உணர்ந்த அவர், மனுக்கள் குழுவுக்கு வந்த மனுக்களை தானே நேரடியாக ஆய்வு செய்து வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், மனுக்கள் குழு அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்ததிலிருந்து கட்சி நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்து வருகிறார். உளவுத்துறை வழங்கிய ரகசிய ரிப்போர்ட் அடிப்படையில் தான் சிறையில் இருக்கும்போது யார் யார் சிறைக்கு வந்தார்கள்? சிறைக்குள் வந்து தன்னை பார்க்க மனு செய்தார்கள்? என்பதை தெரிந்து கொண்டார்.

மேலும், மனுக்கள் குழுவின் நடவடிக்கையில் திருப்தி ஏற்படாத அவர் மனுக்கள் குழுவுக்கு வந்த மனுக்களை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

விரைவில் களையெடுப்பு படலம் தொடங்கலாம்’ என்றனர்.

போட்டா எடுத்து பேஸ்புக்குல விட்டுறுவேன் காதல் ஜோடிகளை மிரட்டிய நிருபர் கைது

போட்டா எடுத்து  பேஸ்புக்குல விட்டுறுவேன்

காதல் ஜோடிகளை மிரட்டிய நிருபர் கைது

திருச்சி அருகே உள்ள சுற்றுலா தலமான முக்கொம்பில் காதலர்களிடம் படம் பிடித்து பேஸ் புக்கில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி பணம் பறித்த நிருபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே உள்ள சுற்றுலா தலம் முக்கொம்பு. இங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அதிகம் உள்ளது. இதனால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இங்கு சுற்றுலா வருவது வழக்கம். காதலர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

நேற்று மதியம், பொதுமக்கள் மற்றும் காதலர்கள் கூட்டம் ஓரளவு இருந்தது. அங்குள்ள பார்க்கில் பலர் உட்கார்ந்து பொழுதை கழித்தனர். அப்போது பொதுமக்கள் உள்ள பகுதியில் தன்னை போலீஸ் எனவும், காதலர்கள் உள்ள பகுதிக்கு சென்று நிருபர் என கூறியும் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதில் உச்சக்கட்டமாக காதலர்களிடம் செல்போனில் படம் எடுத்து பேஸ் புக் மற்றும் இன்டர்நெட்டில் உலா விடுவேன் என கூறி ரூ.100 முதல் ரூ.500 வரை பணம் பறித்துள்ளார்.

 ஒரு சிலர் போலி நிருபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்று திரண்டு அவரை பிடித்து அங்குள்ள புறக்காவல் மையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜீயபுரம் போலீசார், அந்த வாலிபரை அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர்.

விசாரணையில் திருச்சி பெரியகடைவீதி, டைமண்ட் பஜாரை சேர்ந்த ஜமால் (33) என்பதும், திருச்சியில் மாத இதழ் ஒன்றில் குற்றம் குறித்த நிருபராக பணியில் உள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் ஜமாலிடம் இருந்து அடையாள அட்டை, செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து முக்கொம்பு உதவி பொறியாளர் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி கென்னடி உத்தரவின் பேரில், ஜமால் மீது இபிகோ 387 பணம் பறித்தல், 506 (1) மிரட்டுதல் போன்ற பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்கு பதிந்து ஜமாலை கைது செய்து விசாரித்து வருகிறார்.

சமீபகாலமாக திருச்சியில் வராத பத்திரிக்கையின் நிருபர்கள் என்று சொல்லி அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் தொழில்அதிபர்கள் வரை மிரட்டி நிருபர் என்று பணம் பறிக்கும் கும்பல் .அதிகரித்து வருகிறது.

நிருபர் என்று மிரட்டுபவர்களின் அடையாளை அட்டைகளை பரிசோதனை செய்தாலே அவர்கள் டூபாக்குர் நிருபர் என்பது உண்மையாகும் ஆனால் பெருபாலனோர் இதை செய்ய தயங்குகின்றனர். காரணம் அவர்களின் தப்பு வெளியே தெரிந்துவிடுமோ என்கிற கவலையில் அவர்களிடம் பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர்.

11/6/14

உள்ளே.. போ - பாட்ஷா ரஜினி சொன்னது. - வெளியே.... போ - எம்.ஏ.எம் சாதிக் தம்பிகள் சொல்வது - பாகம் 1




உள்ளே.. போ - பாட்ஷா ரஜினி சொன்னது. - 
வெளியே.... போ - எம்.ஏ.எம் சாதிக் தம்பிகள் சொல்வது 


செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் 40 பேராசியர்களை எந்தவித பேச்சும் இன்றி வேலையை விட்டு வெளியேற்றியது. 
அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் 15 பேர் வேலையிலிருந்து நீக்கியது.
மீண்டும் நவம்பர் மாதம் 05.011.2014 நேற்று 16 பேர் நீக்கமாம் -
இவர்கள் அத்தனை பேரும் 1998ல் கல்லூரி ஆரம்பிக்கும் போது செங்கல்சுமந்து கல்லூரி கட்டுவதற்கு காரணமாக இருந்தவர்கள். 
என்ன கொடுமை சார்.. இது..

யார் இந்த எம்.ஏ.எம். ( MAM )

திருச்சி பாய்லர் தொழிற்சாலையில் மேலாளராக இருந்தவர் எம்.அப்துல்மஜித் அந்த வேலை செய்து கொண்டிருக்கும் போதே எல்லோரையும் போல இவரும் ரியல் எஸ்டேட் தொழிலையும் சேர்த்தே பார்க்கிறார். 

அப்போது அவருடைய அண்ணன் சாதிக் சென்னை பல்கலைகழக்கத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக கல்லூரி ஆரம்பித்து காசு பார்க்க . கனவு காண்கிறார்கள் சகோதர்கள்.

அப்துல்மஜித்தின் இரண்டாவது மகன் கணிப்பொறிதுறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டுயிருப்பதால் அவரை வைத்தே கல்லூரி ஆரம்பிக்க முடிவு செய்து ரியல் எஸ்டேட் தொழிலுக்காக சென்னை பைபாஸ் சாலையில் வாங்கி போட்டுயிருந்த 44 ஏக்கர் நிலத்தில் 1998ம் ஆண்டு 76 மாணவர்களை கொண்டு எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கிறார்கள். 

சிறப்பாக ஆள்பிடிக்க சிந்தனை செம்மல் சண்முகநாதனை அவர் அப்போது முன்னாள் அமைச்சர் பொன்னுசாமியின் கல்லூரியில் பணியாற்றுவதையும் பொருட்படுத்தாமல் எல்லா பொறியியல் கல்லூரிகளுக்கும் பொறுப்பாக புரோக்கர் வேலை பார்த்த சிவானி செல்வராஜ்க்கும் பொன்னுசாமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு சண்முகநாதனை தன்னுடைய எம்.ஏ.எம் கல்லூரியில் இயக்குநராக அமர்த்தினார்கள்.

அவருடைய அறிவை அனுணையை அனுபவத்தை பயன்படுத்தி அரசின் அதிகாரிகளின் உதவியோடு, 
கல்லூரிகளுக்கு தேவையான வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தும் கூட அனுமதி பெற்று தருவது என சகலவிதத்திலும் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி ஒற்றை கல்லூரியாக இருந்த அந்த வாளாகத்தில் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரிக்கு எம்.ஏ. மாலுக்கு பொறுப்பாளராகவும், எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு மூத்தமகன் செயலாளர் எம்.ஏ. முகமதுநிஜாம், எம்.ஏ.எம். ஸ்கூல் ஆப் இஞ்சினரிங்க்கு மூன்றாவது மகன் எம்.ஏ.பீர்முகமது செயளாராகவும் பலிடெக்னிக் நர்சிங் கல்லூரி அனுமதி எல்லாம் வாங்கி கொடுத்தார். வதவதன்னு சாதிக் வம்சத்தின் எல்லா குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு காலேஜ் அல்வா மாதிரி கிடைத்தது. 

அதன் பிறகு சண்முகநாதன் தன்னுடன் வெளி கல்லூரிகளில் பணியாற்றிய தற்போது கஷ்டப்பட்டுயிருக்கும் ஊழியர்கள் பலபேருக்கு எம்.ஏ.எம். கல்விநிருவனத்தில் வாய்ப்பு கொடுக்கிறார்..

அவர் மூலமாக நியமிக்கபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாவதை கருத்தில் கொண்டு இதை இப்படியே விட்டால் ஆபத்து என்று எண்ணிய மஜித்தின் குழந்தைகள் சாம்ராட் அசோகன் வாழ்ந்த சண்முகநாதனை 23ம் புலிகேசி வடிவேலு போல் டம்பியாக்கிவிட்டா்கள். 

புள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக நல்லது நினைத்த சண்முகநாதனுக்கு பிடரியில் விழுந்தது பிரம்ம அடி எாந்த வேகத்தோடு உள்ளே வந்தாரோ அதே வேகத்தோடு அவமானபடுத்தபட்டு அனுப்பப்பட்டார். 

இலட்சகணக்கான மாணவர்களின் ஆதர்ஷபுருஷராக இருந்த சண்முகநாதன் தான் கற்ற கல்வி வீணாகிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு மீண்டும் ஜெ.ஜெ.வென பொன்னுசாமியிடமே சரணடைந்துள்ளார்.

அவர் வெளியேறிய நேரத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்த பொன்னவைக்கோ கல்லூரி நிர்வாகத்திற்கு அரங்காவலராகவும், ஆலோசகராகவும் வருகிறார். 

பொன்னவைக்கோவையும் மண்ணைக் கவ்வவைத்த மஜித் சகோதர்களின் தில்லாலங்கடி .....

திருவிளையாடல்கள் தொடரும்……

கட்டி பிடித்து முத்தம் கொடுத்த திருச்சி ஜோசப் கல்லூரியின் உதவி பேராசிரியர்

கட்டி பிடித்து முத்தம் கொடுத்த திருச்சி ஜோசப் கல்லூரியின் உதவி பேராசிரியர் மீது 2 மாதத்துக்கு பின் வழக்கு - சஸ்பெண்ட்

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்

திருச்சி ஜோசப் கல்லூரிரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகா ரில், கமிஷனர் உத்தரவின் பேரில் 2 மாதத்திற்கு பின் உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந் துள்ளனர்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி யிருந்தார். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி யாற்றி வருபவர் அந்தோணி சக்தி.

கடந்த 2 மாதம் முன்பு பிரபாவதிக்கு அந்தோணி சக்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வகுப்பில் தனியாக இருந்தபோது கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற போது, மாணவி தடுத்து வகுப் பறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

அந்தோணிசக்தி மீது பிரபாவதி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் புகார் கொடுத் தார். கமிஷனர் உத்தரவின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியிடம் உதவி பேராசிரியர் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு பின் உதவி பேராசிரியர் அந்தோணிசக்தி மீது கோட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து உள்ளனர்.