திருச்சியில் பிடிபட்ட கொலைகார இளம் பெண்..... இப்படியும் பெண்களா ?
அப்போது பின்னால் சென்ற திவ்யபிரியா, வீட்டுக்குள் சென்றார். தான் தெரியாமல் செய்துவிட்டதாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறி, கீழே குனிவதுபோல் நடித்தார். திடீரென .......
திருச்சியில் மூதாட்டி கொலையில் மாடியில் வசித்து வந்த உடற்கல்வி ஆசிரியை கைது செய்யப்பட்டார். பூ பறிப்பது, செல்போன் பேசுவதை கண்டித்ததால் கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்தவர் முத்துரத்தினாவதி (80). இவரது மகள் கள் கோகிலா, நளாயினி. மூத்த மகள் கோகிலா குடும்ப தகராறு காரணமாக தனியாக பிரிந்து சென்று அருகில் உள்ள வீட்டில் வசிக்கிறார்.
இரண்டாவது மகள் நளாயினி, கணவர் சங்கர் இறந்து விட்டதால் மகன் கார்த்திகேயன், மருமகள் ஜனனி ஆகியோருடன் தாய் முத்துரத்தினாவதி வீட்டில் வசிக்கிறார். இவர்களது வீட்டு மாடியில் ராஜேந்திரன் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருக்கிறார். ராஜேந்திரன் மண்ணச்சநல்லூரில் போர்வெல் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி வேணி, மகள் திவ்யா(23), மகன் கார்த்திக். ராஜேந்திரன் பணி காரணமாக பல நாட்கள் வெளியூரில் இருப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் நளாயினி, மகன் கார்த்திகேயன், ஜனனி ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக புத்தூர் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த முத்து ரத்தினாவதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்த 5 பவுன் செயின், 3 பவுன் வளையல்கள், 1 பவுன் தோடு என 9 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியே இருந்து வந்து ஆட்கள் கொலை செய்ய சாத்தியம் இல்லை என கருதிய போலீசார் மாடியில் இருந்த வேணி, திவ்யபிரியா, கார்த்திக், உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது திவ்யபிரியா முன்னுக்குபின் முரணாக பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திவ்யபிரியா, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அடிக்கடி மாடிக்கு சென்று தனிமை யில் நீண்ட நேரம் செல் போனில் பேசுவது வழக்கம். மாடியில் முத்து ரத்தினாவதி பூச்செடிகளை பராமரித்து வந்தார். அங்கு செல்போனில் பேசும் திவ்யபிரியா பேச்சு சுவாரஸ்யத்தில் பூச்செடிகளை பிய்த்துக்கொண்டே இருந்தார்.
இதைக்கண்ட முத்துரத்தினாவதி, திவ்யபிரியாவை அடிக்கடி கண்டித்தார். செல்போனில் பேசுவதை வீட்டில் சொல்லப்போவதாக மிரட்டினார். இதனால் அவர் மீது திவ்யபிரியா கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், துவைத்த துணிகளை காய வைப்பதற்காக முத்துரத்தினாவதி மாடிக்கு சென்றார். அப்போது டி&சர்ட், பேண்ட் அணிந்திருந்த திவ்யா, போனில் பேசிக்கொண்டே செடியை பிய்த்து போட்டார். இதை பார்த்த முத்துரத்தினாவதி கோபத்தில் திட்டினார். இதனால் எரிச்சலடைந்த திவ்யா அவரை பிடித்து தள்ளினார்.
இதனால் அவர் கீழே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துரத்தினாவதி, தனது மகளிடம் கூறி வீட்டை காலி செய்ய கூறுவதாக கூறி கீழே இறங்கி சென்றார். அப்போது பின்னால் சென்ற திவ்யபிரியா, வீட்டுக்குள் சென்றார். தான் தெரியாமல் செய்துவிட்டதாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறி, கீழே குனிவதுபோல் நடித்தார். திடீரென காலை வாரி விட்டார். இதில் மல்லாக்க விழுந்த முத்துரத்தினவாதி பின்னந்தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி மயங்கினார். ஆத்திரம் தீராத திவ்யபிரியா, சமையலறையில் இருந்த 2 கத்தியை எடுத்து வந்து மூதாட்டியின் வயிற்றில் குத்தினார்.
மேலும் அப்படியே விட்டு சென்றால் போலீஸ் விசாரணையில் மாட்டி கொள் வோம் என நினைத்த திவ்யபிரியா, கொள்ளையர்கள் நகையை எடுத்து சென்றதுபோல், மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து சென்றார். பின்னர் கத்தி, நகைகளுடன் மாடி க்கு சென்ற அவர், வீட்டின் பின்பக்கம் உள்ள சாக்கடையில அவற்றை போட்டுவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் இருந்துவிட்டார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து திவ்யபிரியாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யபிரியா சாக்கடை கால்வாயில் வீசியெறிந்த நகைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உஷார் திவ்யா
கொள்ளையர்கள் கொலை செய்தது போல் நகைகளை கழற்றிய திவ்யபிரியா, நகை மற்றும் 2 கத்திகளையும் மாடியில் இருந்த பூந்தொட்டிக்குள் மறைத்து வைத்தார். முதலில் விசாரணைக்கு வந்த போலீசார் வீட்டின் பின்பக்கம் சோதனை செய்த போது கத்திகளை பார்க்கவில்லை. இதற்கிடையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதை அறிந்த திவ்யபிரியா, வேகமாக மாடிக்கு சென்று மறைத்து வைத்த நகை, கத்தியை சாக்கடை கால்வாயில் வீசி எறிந்து விட்டு அமைதியாக வந்துவிட்டார்.
தாயிடம் நடிப்பு
முத்துரத்தினாவதியை கத்தியால் குத்தியபோது திவ்யபிரியா அணிந்திருந்த டி&சர்டில் ரத்த கறை பட்டது. பின்னர் வீட்டிற்குள் சென்ற திவ்யபிரியா நேராக பாத்ரூம் சென்று டி&சர்ட்டை கழற்றி துவைத்தார். பின்னர் தாய் வேணியிடம் மாற்று சட்டை கேட்டுள்ளார். அணிந்திருந்த டி&சர்ட் எங்கே என கேட்ட போது மாடிக்கு சென்ற போது அழுக்காகிவிட்டதாக கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் செல்போனில் கேம் ஆட்டம்
திவ்யபிரியா, பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த போது வாலிபால் வீராங்கனை. போலீஸ் விசாரணையின் போது திவ்யபிரியா, எவ்வித பதற்றம், இறுக்கம், வேதனையை காட்டவில்லை.
மாறாக சைக்கோ போல் நடந்து கொண்டுள்ளார். போலீசாரின் கேள்விகளுக்கு சத்தமாக கத்தி பதிலளித்தும், பின்னர் சிரித்து கொண்டு பேசுவதுமாக இருந்துள்ளார். விசாரணைக்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் செல்போனில் வீடியோ கேம் விளையாடி போலீசாரை அதிர வைத்துள்ளார்.