2/4/15

திருச்சியில் பிடிபட்ட கொலைகார இளம் பெண்..... இப்படியும் பெண்களா ?

அப்போது பின்னால் சென்ற திவ்யபிரியா, வீட்டுக்குள் சென்றார். தான் தெரியாமல் செய்துவிட்டதாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறி, கீழே குனிவதுபோல் நடித்தார். திடீரென .......
திருச்சியில் மூதாட்டி கொலையில் மாடியில் வசித்து வந்த உடற்கல்வி ஆசிரியை கைது செய்யப்பட்டார். பூ பறிப்பது, செல்போன் பேசுவதை கண்டித்ததால் கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்தவர் முத்துரத்தினாவதி (80). இவரது மகள் கள் கோகிலா, நளாயினி. மூத்த மகள் கோகிலா குடும்ப தகராறு காரணமாக தனியாக பிரிந்து சென்று அருகில் உள்ள வீட்டில் வசிக்கிறார். 
இரண்டாவது மகள் நளாயினி, கணவர் சங்கர் இறந்து விட்டதால் மகன் கார்த்திகேயன், மருமகள் ஜனனி ஆகியோருடன் தாய் முத்துரத்தினாவதி வீட்டில் வசிக்கிறார். இவர்களது வீட்டு மாடியில் ராஜேந்திரன் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருக்கிறார். ராஜேந்திரன் மண்ணச்சநல்லூரில் போர்வெல் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி வேணி, மகள் திவ்யா(23), மகன் கார்த்திக். ராஜேந்திரன் பணி காரணமாக பல நாட்கள் வெளியூரில் இருப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் நளாயினி, மகன் கார்த்திகேயன், ஜனனி ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக புத்தூர் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த முத்து ரத்தினாவதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்த 5 பவுன் செயின், 3 பவுன் வளையல்கள், 1 பவுன் தோடு என 9 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில் வெளியே இருந்து வந்து ஆட்கள் கொலை செய்ய சாத்தியம் இல்லை என கருதிய போலீசார் மாடியில் இருந்த வேணி, திவ்யபிரியா, கார்த்திக், உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது திவ்யபிரியா முன்னுக்குபின் முரணாக பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திவ்யபிரியா, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அடிக்கடி மாடிக்கு சென்று தனிமை யில் நீண்ட நேரம் செல் போனில் பேசுவது வழக்கம். மாடியில் முத்து ரத்தினாவதி பூச்செடிகளை பராமரித்து வந்தார். அங்கு செல்போனில் பேசும் திவ்யபிரியா பேச்சு சுவாரஸ்யத்தில் பூச்செடிகளை பிய்த்துக்கொண்டே இருந்தார். 
இதைக்கண்ட முத்துரத்தினாவதி, திவ்யபிரியாவை அடிக்கடி கண்டித்தார். செல்போனில் பேசுவதை வீட்டில் சொல்லப்போவதாக மிரட்டினார். இதனால் அவர் மீது திவ்யபிரியா கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், துவைத்த துணிகளை காய வைப்பதற்காக முத்துரத்தினாவதி மாடிக்கு சென்றார். அப்போது டி&சர்ட், பேண்ட் அணிந்திருந்த திவ்யா, போனில் பேசிக்கொண்டே செடியை பிய்த்து போட்டார். இதை பார்த்த முத்துரத்தினாவதி கோபத்தில் திட்டினார். இதனால் எரிச்சலடைந்த திவ்யா அவரை பிடித்து தள்ளினார்.
 இதனால் அவர் கீழே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துரத்தினாவதி, தனது மகளிடம் கூறி வீட்டை காலி செய்ய கூறுவதாக கூறி கீழே இறங்கி சென்றார். அப்போது பின்னால் சென்ற திவ்யபிரியா, வீட்டுக்குள் சென்றார். தான் தெரியாமல் செய்துவிட்டதாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறி, கீழே குனிவதுபோல் நடித்தார். திடீரென காலை வாரி விட்டார். இதில் மல்லாக்க விழுந்த முத்துரத்தினவாதி பின்னந்தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி மயங்கினார். ஆத்திரம் தீராத திவ்யபிரியா, சமையலறையில் இருந்த 2 கத்தியை எடுத்து வந்து மூதாட்டியின் வயிற்றில் குத்தினார். 
மேலும் அப்படியே விட்டு சென்றால் போலீஸ் விசாரணையில் மாட்டி கொள் வோம் என நினைத்த திவ்யபிரியா, கொள்ளையர்கள் நகையை எடுத்து சென்றதுபோல், மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து சென்றார். பின்னர் கத்தி, நகைகளுடன் மாடி க்கு சென்ற அவர், வீட்டின் பின்பக்கம் உள்ள சாக்கடையில அவற்றை போட்டுவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் இருந்துவிட்டார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து திவ்யபிரியாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யபிரியா சாக்கடை கால்வாயில் வீசியெறிந்த நகைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உஷார் திவ்யா
கொள்ளையர்கள் கொலை செய்தது போல் நகைகளை கழற்றிய திவ்யபிரியா, நகை மற்றும் 2 கத்திகளையும் மாடியில் இருந்த பூந்தொட்டிக்குள் மறைத்து வைத்தார். முதலில் விசாரணைக்கு வந்த போலீசார் வீட்டின் பின்பக்கம் சோதனை செய்த போது கத்திகளை பார்க்கவில்லை. இதற்கிடையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதை அறிந்த திவ்யபிரியா, வேகமாக மாடிக்கு சென்று மறைத்து வைத்த நகை, கத்தியை சாக்கடை கால்வாயில் வீசி எறிந்து விட்டு அமைதியாக வந்துவிட்டார்.
தாயிடம் நடிப்பு
முத்துரத்தினாவதியை கத்தியால் குத்தியபோது திவ்யபிரியா அணிந்திருந்த டி&சர்டில் ரத்த கறை பட்டது. பின்னர் வீட்டிற்குள் சென்ற திவ்யபிரியா நேராக பாத்ரூம் சென்று டி&சர்ட்டை கழற்றி துவைத்தார். பின்னர் தாய் வேணியிடம் மாற்று சட்டை கேட்டுள்ளார். அணிந்திருந்த டி&சர்ட் எங்கே என கேட்ட போது மாடிக்கு சென்ற போது அழுக்காகிவிட்டதாக கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் செல்போனில் கேம் ஆட்டம்
திவ்யபிரியா, பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த போது வாலிபால் வீராங்கனை. போலீஸ் விசாரணையின் போது திவ்யபிரியா, எவ்வித பதற்றம், இறுக்கம், வேதனையை காட்டவில்லை.
மாறாக சைக்கோ போல் நடந்து கொண்டுள்ளார். போலீசாரின் கேள்விகளுக்கு சத்தமாக கத்தி பதிலளித்தும், பின்னர் சிரித்து கொண்டு பேசுவதுமாக இருந்துள்ளார். விசாரணைக்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் செல்போனில் வீடியோ கேம் விளையாடி போலீசாரை அதிர வைத்துள்ளார்.

1/28/15

திருச்சி- சூரியூர் கடந்த 3 நாட்களாக என்ன நடக்கிறது......


பத்திரிக்கை, ஊடகங்களை விட சமூக வலைதளங்களுக்கு சக்தியும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். என்பதை உணர்த்திக்கொண்டுயிருக்கும் காலம் இது…. அதை இந்த சூரியூர் கிராம மக்கள் உணர வைத்துக்கொண்டுயிருக்கிறார்கள்…    ஊடகங்களிலும் மனசாட்சியுள்ள சில மாந்தர்கள் பணியாற்றுவதால் அப்பப்போ… சில தகவல்கள் வெளிவந்து கொண்டு தான்… இருக்கிறது……







திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குப் பின்புறம் உள்ள சின்ன சூரியூர், பெரிய சூரியூர் கிராமங்களுக்கு இடையே தினமும் 90 லட்சம் லிட்டர் நீரை எடுக்க அனுமதி பெற்று சட்ட விரோதமாக இயங்கி வரும் அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்தை ஏன் மூட வேண்டும்!!


திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குப் பின்புறம் உள்ள சின்ன சூரியூர், பெரிய சூரியூர் கிராமங்களுக்கு இடையே சூரியூர் ஊராட்சி, பெரிய சூரியூர் கிராமத்தில் சர்வே எண் 469/1A2 மற்றும் 469/1B2 நிலங்களில் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் விவசாய நிலத்தில் ராட்சச போர் போட்டு நீர் எடுக்கும் திட்டத்துடன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜின் குடும்பத்தினருக்குச் சொந்தமான எல்..பாட்டிலர்ஸ் எனும் பெப்சி கம்பெனியின் இந்த நிறுவனம், 2010-ல் இந்த கம்பெனியை இங்கு ஆரம்பித்தது .அப்போது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ எதுவும் நடத்தாமல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு நிலத்தடியில் இருந்து தினமும் 90 லட்சம் லிட்டர் நீர் எடுக்க அனுமதி பெறப்பட்டு உள்ளது . இதை எதிர்த்து கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் போராடி வருகின்றனர்.

கீழ்க்கண்ட அனுமதி பெறப்படவில்லை :
-------------------------------------------------------
2000 சதுர அடிக்கு மேல் கட்டப்படு ம் வணிக கட்டிடங்களுக்கு தேவையான கட்டிட வரைபட அனுமதி மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) பெற வேண்டும். ஆனால் எல். பாட்டிலர்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது . ஆனால் ஏதும் நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) இன்றுவரை எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை. எல். பாட்டிலர்ஸ் நிறுவனம் முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது

மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன் படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு, ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி மற்றும் இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்ய சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.


இப்பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி கம்பெனி வந்த பிறகு, எல்லாம் வீணாப்போய் விட்டது . கம்பெனி ஆரம்பிச்ச வேகத்தில் பெரிய சூரியூர் எல்லைக்கு உட்பட்ட கம்பெனி வளாகத்தில் ஆறு போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் அஞ்சு போர்வெல்களையும் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது . அத்தனையும் ராட்சத போர்கள்.. இதனால சுற்றுவட்டாரத்துல இருக்கிற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போய் விவசாயம் அழிந்தது வருகிறது.

இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பும், மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் அதனால் விவசாயம் அழிந்தும் வருகிறது.


இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்கும் கிணற்று பாசனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது .


சூரியூர் எல்லைக்குள் இருக்கும் கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்கள் என ராட்சத போர்களை அமைத்து 24 மணிநேரமும் கணக்கின்றி நீரை உறிஞ்சி எடுக்கின்றனர் அந்த நிறுவனத்தினர். இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றாக பாழாகி விட்டது . சகல சவுகர்யங்களுடன் பெப்சி நிறுவனம் இயங்கிக் கொண்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் விவசாயிகளும் மற்ற மக்களும் தினந்தோறும் தண்ணீருக்காக தவியாய் தவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.


பல்வேறு துரையின் அனுமதி பெறாமல் இயங்கிவரும் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தை நிரந்தரமாக மூடி, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கோரி மக்கள் பல்வேறு போராடங்களை மக்கள் தண்ணீர் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பல்வேறு முறை மனு கொடுத்தும், உண்ணாவிரதம் , பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தின் முன்பு மறியல் செய்தும் போராடினர் .

மக்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக வீறு வழியின்றி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து கம்பெனியை ஆய்வுசெய்ய உத்தரவிட்டார்.


மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி கம்பெனி அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

பல கட்ட போராட்டங்களுக்குப்பின் கம்பெனியில் ஆய்வு நடத்திய திருவெறும்பூர் பி.டி. ரெங்கநாதன், அனுமதியின்றி நடத்துவதாகக் கூறி கம்பெனி நிர்வாகிகள் மீது 3.9.2014 அன்று நாவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இன்று வரை ஒரு நடவடிக்கையும் இல்லை.

09-11-2014 அன்று திருச்சி சூரியூர் சமுதாயக்கூடத்தில் கூடிய பொதுமக்கள், தண்ணீர் இயக்கம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சமூக ஆர்வலர்களுடன் கலந்துபேசி, பெப்சி கம்பெனிக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவதென இப்பகுதி மக்கள் ஆலோசனை நடத்தினர். இப்போராட்ட ஆலோசனைக் கூட்டதில் நானும் கலந்து கொண்டு எனது பல்வேறு போராட்ட அனுபவங்களை கூறி, இப்பகுதி மக்களின் நிலைமையை ஒட்டி போராட்ட வடிவங்களின் நிலையை முடிவு செய்யுங்கள் எனக் கூறினீன்.
போராட்டக் கூட்டத்தில் மக்கள், பெப்சி கம்பெனிக்கு செல்லும் அனைத்து சாலைகளை சேதமாக்கி தடை செய்வது , பெப்சி கம்பெனி முன்பு தூக்கு போடும் போராட்டம், பெப்சி கம்பெனியை இழுத்து மூடும்வரை தொடர் போராட்டங்கள் நடத்துவது, அரசு கைது செய்து சிறையில் வைத்தால் அதையும் உறுதியாக எதிர் கொள்வது, சமூக வலைதளங்கள் மூலம் பெப்சியின் கம்பெனியின் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வது என முடிவெடுத்தனர்.


மக்களின் போராட்ட ஊர்வலத்தை தொடங்கி வைத்து மக்களுடன் சிறிதுநேரம் இருந்து விட்டு அடுத்தடுத்த பணிகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு இருந்ததால் உடன் இருக்க முடியாமல் புறப்பட்டோம்.

போராட்ட திட்டப்படி போராட்டத்தில் களம் இறங்கிய 100க்கும் மேற்பட்டபெண்கள், ஆண்கள் வட்டாச்சியர் உட்பட பலரின் பல்வேறு வெற்று வாக்குறுதிக்கு மயங்காமல் உறுதியுடன் இருக்க, காவல்துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்பு இரவு முழுவதும் வைக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.

அரசின் பாராமுகத்தை உலகிற்கு உணர்த்தும் விதத்தில்
"காலண்டரை பார்த்து குடியரசு தினம் கொண்டாடதே;
"நமக்கான உரிமை இருக்கிறதா என்று நினைத்து

பார்த்து அதைக் கொண்டாடு" என்ற முழக்கத்துடன்



குடியரசு தினமான 26-01-2015 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அரசு கொடுத்த தங்களது குடும்ப அட்டையை திரும்ப அரசிடமே ஒப்படைத்து, அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைக் காட்டுவது என முடிவு செய்தனர் .

நகர ஊரமைப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை,மாசுக்கட்டுபாட்டு வாரியம் என அரசின் மூன்ரூ துறைகளிடம் அனுமதி பெறாமல் இயங்கி வரும் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தை நிரந்தரமாக மூடக் வலியிறுத்தி அரசு கொடுத்த தங்களது குடும்ப அட்டையை திரும்ப அரசிடமே ஒப்படைப்பது என முடிவு செய்தனர் .


அதன் அடிப்படையில் 26-01-2015 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அரசு கொடுத்த தங்களது குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்க சென்ற 50 பேரை வழியிலேயெ கைது செய்து கே.கே. நகரில் உள்ள மாநகர காவல்துறை சமுதாயக் கூடதில் வைத்து, இரவு விடுதலை செய்தது காவல்துறை.

27-01-2015 செவ்வாய் முதல் திருச்சி- சூரியூரில் தொடர் உண்ணா நிலைப் போரட்டத்தை தொடன்கியுள்ளனர் சூரியூர் மக்கள்.
தமிழகத்தில் கனிமவள கொள்ளை போலவே, நீர்வளக் கொள்ளையும் எவ்வித கட்டுப்பாடின்றி நடந்து வருகிறது தமிழகத்தின் நீரெல்லாம் பன்னாட்டு கம்பனிகளின் குளிர்பான் ஆலைகளுக்கு எவ்வித வரையறை இன்றி தாரை வார்க்கப்பட்டு வருகிறது . பல லட்சம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் கட்டிக் காத்த நமது நீர்வளத்தை சில பத்து ஆண்டுகளில் வளர்ச்சி என ஒரு கூட்டம் அழித்து வருகிறது .
பன்னாட்டு கம்பனிகளின் குளிர்பான ஆலைகளுக்கு என 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமண்டூரில் உள்ள பெப்சி ஆலை,
திருபெரும்புதூரில் உள்ள கொக்கோ-கோலா ஆலை,



நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள கொக்கோ-கோலா ஆலை, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் பெப்சி ஆலை,



ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் கொக்கோ-கோலா ஆலை என வரிசையாக அணிவகுத்து நின்று நமது நீர்வளத்தை அளிப்பது மட்டும் இன்றி சுற்றியுள்ள விவசாய நிலத்தை அழித்தும், மக்களுக்கு பல்வேறு நோய்களை அள்ளிக் கொடுத்தும் வருகிறது .

இன்னொரு புறம் தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை விஷமாக்கி விடும் தொழிற்சாலைக் கழிவுகள், அதனால் குடிப்பதற்கு பயன் இல்லாமல் போய்விட்ட ஆழ்குழாய் கிணறுகள், ஆறுகள் , ஏரிகள் , கண்மாய்கள் , நீர்நிலைகள் . அதனால் நாடெங்கும் பாட்டில் தண்ணீர் விற்பனை. சுதந்திரம், குடியரசு என்று சொல்லி 68 ஆண்டுகளாய நமது நாட்டை ஆண்டு (பன்னாட்டு கம்பனிக்கு நாட்டைவிற்று), நல்ல நீரை வழங்க வேண்டிய அரசுகளே, சென்னை புழல் அருகே உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நீரை எடுத்து அம்மா குடிநீர் திட்டம் என்ற பெயரிலும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலூர் அருகே தடுப்பணை கட்டி எடுக்கப்பட்டு வரும் இந்திய அரசின் தென்னக ரயில்வேயின் ரயில் குடிநீர் என்ற பெயரிலும் குடிநீரை வணிகமாகி விற்கும் கொடுமை நடந்து வருகிறது .


குடிநீரை வணிகமாகி விற்கும் கொடுமை பல்வேறு தனியார் நிறுவனங்களால் வரைமுறையற்று நடந்து வருகிறது . மேலும் மறைநீர் என்ற பெயரில் நமக்கு நேரடியாகத் தெரியாமல் நமது நீர்வளம் உலகம் முழுக்க பல்வேறு ஆதிக்க நாடுகளால் சுரண்டப்பட்டு வருகிறது .


அரசு மீத்தேன் திட்டம் முதல் கொக்கோ-கோலா, பெப்சி, 
அணு உலை திட்டம், தேவாரம் நீயூட்ரிநோ, கெயில் நிறுவனம், திருவண்ணாமலை கவுந்தி வேடியப்பன் மலையை ஜிண்டால் நிறுவனத்திற்க்கு கொடுப்பது, தமிழகத்தின் நீர்வளங்கள் அனைதையும் பன்னாட்டு கம்பனிக்கும், அவர்களுக்கு எடுபிடியாக இருந்து சேவை செய்பவர்களுக்கு கொடுப்பது,தமிழகத்தின் கனிமவளங்களை பன்னாட்டு கம்பனிகளின் ஏவலாட்களுக்கு கொடுப்பது என ஒவ்வொன்றிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும், போராடும் மக்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போட்டு அச்சுறுத்துவது, சிறையில் அடைப்பது என்பது இந்த அரசு தமிழக மக்களுக்கு என இல்லாமல் வெளிநாட்டு கம்பனிக்கு ஆதரவாகவே உள்ளது என்பது மீண்டும், மீண்டும், அம்பலமாகி வருகிறது.

அரசாங்காம் தனியார் நிருவனங்களுக்கு துணைநின்றாலும் சூரியூர் மக்களின் 3 நாள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருவதால்.. கூடவே லோக்கல் தேமுதிக எம்.எல். செந்தில்குமார், வழக்கறிஞர் பானுமதி என்று மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டே செல்வதால்.. திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளின் பிடிவாதமும் சற்று தளர்ந்து நிருவனந்தை நிரந்தரமாக மூட மனம் இல்லாமல் அங்கே பர்மிசன் இல்லாம் தண்ணீர் எடுத்தக்கொண்டுயிரந்த இராட்ச குழாய்களை சீல் வைக்கிறோம் என்று முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கியிருக்கிறார்கள்…


குறிப்பு

சூரியூரில் எல்.ஏ. பாட்டில் நிறுவனத்தை போன்றே இன்னும் 4 குடிநீர் எடுக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன… மக்களின் பேராரட்டத்தை பார்த்து அவர்களே அதை மூடிக்கொள்வதாக சொல்லியிருக்கிறார்களாம்… பார்போம்… என்ன நடக்கிறது என்று…..


வெண்வேந்தேன்.